மே 17 இயக்கத்தினரும் தோழமை இயக்கத்தினரும் இணைந்து நடத்திய சூன் 26 - நினைவேந்தல் நமக்கு உணர்த்துவது. மக்கள் நியமான காரணங்களுக்காக வர தயராக இருக்கின்றனர் என்பது.
இந்நிகழ்வின் மூலம் அனைவருக்கும் நாம் சொல்ல விரும்புவது ஒன்று தான் தனிதமிழீழமே ஓரே தீர்வு. ஓர் இனம் தனது உரிமையை கோரியபொழுது அவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியவர்களை தண்டிப்பதால் மட்டும் தீர்வு கிடையாது. எதற்காக இத்தனை காலம் இத்தனை நாள் தங்கள் சொந்தங்களை பறிகொடுத்து உலகின் எங்கும் இல்லாத கொடுமைகளை எல்லாம் அனுபவித்தார்களோ அந்த ஈழ விடுதலையே அவர்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான தீர்வு.
தமிழகத்தில் சாதிக்காகவும் மதத்திற்காகவும் கட்சிக்காகவும் மட்டுமே கூடிகொண்டிருந்த மக்கள் முதன் முறையாக இவைகள் அனைத்தையும் கடந்து தம்மினத்திற்காக ஒன்று கூடினர். இதற்கு ஆதரவு அளித்த அனைத்தும் மக்களுக்கும், கட்சியினருக்கும், இயக்கங்களுக்கும் மற்றும் அனைத்து தோழர்களுக்கும் நன்றி..
பதிவர் - தோழர் ஹரிஹரன்



thx hari
ReplyDelete"ஐ.நா ,,,,வை ,,,
ReplyDeleteநம்ப மாட்டோம்
இந்தியாவையும்
நம்ப மாட்டோம்
ஐ.நா ,,,,வை ,,,
நம்பினால் ,,
என்ன கிடைக்கும்
வவுத்துக்கு வேண்டும் என்றால்
சோறு கிடைக்கும்
எங்கள் மானம்
காக்க படுமா ....
இல்லை ,,,,
இறந்தவர்கள் தான்
உயிருடன் வருவார்களா
கற்பை இழந்த என் சகோதிறிர்கள்
கற்ப்பு கிடைக்குமா ,,,
மார்பில் விளையாடிய
எங்கள் மகன்கள்
மீண்டும் வருவார்களா
ஏதும் வரபோவதில்லை
மானமே போன பிறகு
எங்களுக்கு ,,,
சோறு எதற்கு
எதற்காக ,,இதெல்லாம்
நாங்கள் இழந்தோம் ...
உறிமைக்காகவும் ,,,
ஈழம் விடுதலைக்காகவும்
இழந்து நிற்கிறோம் ,,,,
எதற்காக
எல்லாம் இழந்தோமோ
அது தான் எங்களுக்கு
தீர்வு ,,,,தனி ஈழம் ,,,,
தனி ஈழம் ,,
தனி ஈழம்
ப.கெளதம்